Thursday, 14 March 2013

ஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக ?

ஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.



 இது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும். 

 இவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள்இதில் இருக்கும்.

 சரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும். இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு. எனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள் காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும்.

 - See more at: http://www.karpom.com

Sunday, 10 March 2013

தமிழில் இருக்கும்.

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும். உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும். இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும். இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும். இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும். மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

Sunday, 3 March 2013

Smartphone வாங்க முதல் கவனிக்க வேண்டியவை - Smartphone Buying Guide

Smartphone வாங்க முதல் கவனிக்க வேண்டியவை - Smartphone Buying Guide

smartphonebuying 240 193x250 Smartphone Buying Guide, Winter 2013
 Mobile phones பயன்படுத்தாதவர்கள் இல்லை. இன்று கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் smart phone களுக்கு மாறி வருகிறார்கள். இப்போது பல ரகங்களில் பல இயங்கு தளங்களில் பல விதமான Smartphones கிடைக்கிறது. எவரை கேட்டாலும் iPhone நல்லம் என்பார்கள். ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்காது. எனவே Android OS உள்ள Samsung phone னை பரிந்துரைப்பார்கள். ஆனா இதை விட Windows OS உடனும் Smartphones விற்கப்படுகிறது. எதில் எது நல்லம்? எதை வாங்கலாம் இவற்றின் நன்மை , தீமைகளை ஒப்பிட்டு பார்ப்போம்.

அவ்வப்போது இங்கே பயனுள்ள E books அறிமுகப்படுத்தப்படும். இதுவும் E book தான்.

பின்வரும் தலைப்புகளில் இந்த வழிகாட்டி உதவுகிறது.

  • Explanations of the three major smartphone operating systems: iOS, Android and Windows Phone
  • What to expect from the major manufacturers of smartphones, from Apple to Samsung and everything in between.
  • Terminology you need to comprehend when comparing smartphones
  • A breakdown of the major carriers in the USA, as well as what to look for elsewhere
  • Comparisons of most major smartphones on the market, from the iPhone 5 to the HTC EVO to Samsung Galaxy S III to the Google Nexus 4.
நீங்கள் Smart phone வாங்காவிட்டாலும்  உங்கள் நண்பர்களுக்கு வழி காட்டவாவது பயன் படுத்துங்கள்.
இங்கே சென்று தரவிறக்கி வாசியுங்கள் :  Smart Phone Guide. PDF

வலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்

வலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்

இன்று பலரும் வலைப்பூக்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் அனைவரின் தெரிவும் Blogger தான். ஆனாலும் தமக்கு தெரிந்த வேறு பலரின் வலைப்பூக்களை முன்னுதாரணமாக கொண்டு தமது Blogger இனை வடிவமைக்கிறார்கள். இவ்வாறு அழகு என்ற பெயரில் அலங்கோலமாக வடிவமைப்பது வாகர்களுக்கு இடைஞ்சலை தரும். பொதுவாக வண்ண தெரிவு, ஒழுங்கமைப்பு பற்றி இதில் குறிப்பிடவில்லை.  சில அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி விளக்குகிறேன்.

 முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய  தளம்:

Theme / Template

இது தான் அனைவரின் ஆரம்பம். இணையத்தில் தேடி எதோ ஒன்றை பிடித்து போடுவார்கள். ஆனால் இவை பெரும்பாலும் பக்க தரவிறக்க நேரத்தை பாதிக்கும். அதை விட பல coding பிழைகளையும் கொண்டிருக்கும்.

எப்பொழுதும் Google தரும் Template களை Edit செய்து உங்கள் Blog இனை அழகாக்குங்கள்.

முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய  தளம்: Google Official Blogs:
எவ்வளவு அழகாக உள்ளது. மிக மிக எளிமையாக வடிவமைத்து உள்ளார்கள். எந்த ஒரு பிழையையும் காட்டாமல் மிக நுட்பமாக உள்ளது. இவ்வாறு இருக்க காரணம் இப்பக்கத்துக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் million வாசகர்கள் வருகிறார்கள். அவர்களின் தேவை தகவலே அன்றி அழகு அல்ல. இதை Google நன்றாக புரிந்து வைத்துள்ளது.  இதை போல எளிமையாக வைத்து இருங்கள்.


Widget


திரட்டிகளின் இணைப்பு பட்டை, கடிகாரம், Radio, mp 3 player இவை எல்லாம் பயனற்றவை. அத்துடன் இவை பல Domains இல் இருந்து இயங்குவதால் பக்கத்தை பெரிதாக பாவிக்கும்.


Images:

பதிவுகளை எழுதும் போது படங்கள் தேவை என்றால் Google image இல் தேடுவது வழமை. ஒன்று , இரண்டு படங்கள் என்றால் copy - paste செய்யலாம். அதை விட அதிகம் என்றால் நிச்சயம் அவற்றை Download  செய்து மீள Blogger இல் தரவு ஏற்றுங்கள்.

நீங்கள் பொதுவாக விமர்சன பதிவு எழுதுபவர்களின் பக்கங்களில் கீழே செல்ல செல்ல படங்கள் தோன்றாது இருப்பதை காணலாம். இதுவே காரணம்.


Tracking service


Google Analytic பொதுவாக போதும். அதற்கு  மேலே Stats counter, today hits இப்படி பல tracking செய்நிரல்களை இணைக்காதீர்கள். அண்மையில் Google புதிய ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. தீங்கான Script இணைக்கபட்ட வலைதளங்களை நீக்க ஆரம்பித்தது. முதலில் நீக்கி விட்டு சொல்லுவார்கள். Appeal செய்யலாம். அதிலும் Reject என்றால் நிரந்தரமாக அழிக்கபட்டு விடும்.

i- frame & embed objects


இவற்றை சுருங்க சொல்வதாயின் you tube video களை வலைப்பகுதியில் தோன்ற செய்யும் நடை முறை. பல widgets இல் அதிகளவு  embed object   - Flash காணப்படுகிறது. நிச்சயம் தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

Friend Connect


இப்போது இதுவே ஒரு பதிபவரின் பிரபலத்தை தீர்மானிப்பதாக கருதி கொள்கிறார்கள். ஆனால் இதற்க்கான ஆதரவு தருவதை  Google நிறுத்தி நீண்ட காலம் ஆகிறது. இப்போது பெரும்பாலான வலை பக்கங்களில் இதுவே அதிகளவு HTML பிழைகளை காட்டுகிறது.

ஆனால் இதை நீக்க எவருமே விரும்ப மாட்டார்கள். இதற்கு மாற்றீடாக Feed to Email சேவையை பயன்படுத்தலாம்.



நீங்கள் மாற முதல் சில அம்சங்கள் :

நீங்கள் நிச்சயம் உங்கள் தளத்தை மீள  அமைக்க வேண்டியது இல்லை. இப்போதைக்கு உங்கள் பக்கத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்று கண்டறிந்து நீக்குங்கள்.

இதை செய்ய மிக இலகுவான இரு வழிகள்:
1.Browser's Console:

  1. Fire fox  short cut:  Ctrl + Shift + K
  2. Chrome short cut: Ctrl + Shift + I



முதலில் உங்கள் பக்கத்தை உலாவியில் திறந்து பின்னர் இதில் உள்ள console பகுதியில் வலைப்பூவில் உள்ள சிக்கலான அம்சங்களை காணுங்கள். முடிந்தால் அவற்றை சரி செய்யுங்கள்.


2. Google Page Speed:

google.com/speed/pagespeed

Google தரும் இலவச வசதி. உங்கள் வலைப்பூ முகவரியை கொடுத்து analyze செய்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் பிழை உள்ளது, எப்படி இவற்றை சரி செய்யலாம் என்று விளக்கமாக சொல்வார்கள். நீங்களும் முயன்று பாருங்கள். அத்துடன் உங்கள் பக்க தரத்துக்கு புள்ளி போட்டு தருவார்கள்.


உங்கள் வலைப்பூவை முடிந்தளவு அழகாக்கி உங்கள் வாசகர்லுக்கு விரைவாகவும் அழகாகவும் செயன்றடைய செய்யுங்கள்.

இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking

நீங்கள் எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள் தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன. இந்த பதிவு நீங்கள் எந்த Browser பாவித்தாலும் இவ்வாறான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்வது தொடர்பாக விளக்குகிறது.


நீங்கள் Adblocker எனும் நீட்சியை பயன்படுத்தி கொண்டு இருந்தால் இப்பதிவை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை. அதை பற்றியே இப்பதிவு அலசுகிறது.

இவ்வசதி அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிறது. ஆனால் kananikkaloorikkuக்கு வரும் வாசகர்காகிய உங்களில் 500 பேரில் ஒருவர் தான் இந்த வசதியை பயன்படுத்துவது தெரிகிறது. பல வழிகளில் உதவும் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு இப்பதிவை எழுதுகிறேன்.

விளம்பரங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?

பொதுவாக ஒரு இணைய பக்கம் 2 MB  அளவில் இருந்தால் அதில் விளம்பரங்களுக்கு 20% எடுக்கபட்டு இருக்கும்.
  • Web pages விரைவாக தரவிறங்கி முடிய
  • உங்கள் Data limit / Fair User policy  முடிவடைவதை தடுக்க
  • Browsers அளவுக்கு அதிகமான விளம்பரங்களால் அடிக்கடி உறைவதை தடுக்க
  • அநாகரிகமான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய
நிச்சயம் இறுதி நோக்கத்துக்காகவாவது இதை நீங்கள் பயன் படுத்த வேண்டும். Adsense மட்டும் ஒரு விளம்பர சேவை அல்ல, வேறு நூற்றுக்கணக்கான விளம்பர வழங்குனர்கள் இருக்கிறார்கள்.
 இவர்கள் அநாகரிகமான விரும்ப தகாத விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இது நம்மை அறியாமலே நாம் பார்க்கும் பக்கங்களில் தோன்றி  இருக்கும். நமது கணணி திரையை பார்க்கும் வேறு ஒருவர் நாம் இவ்வாறான விடயங்களில் மூழ்கி போய் இருக்கிறோம் என்று எண்ணி விலகி விடுவார். மொத்தத்தில் நம்மை அறியாமல் இவ்விளம்பரங்கள்  நமக்கு எதிரி ஆகிறது. பெரும்பாலும் இவ்வாறன அனுபவங்களை (?) நீங்கள் File sharing, Torrent  தளங்களில் பெற்று இருக்க முடியும்  

இதை யார் பயன்படுத்த முடியும்?

கணனியில் இணையத்தில் உலாவரும் அனைவரும் பயன்படுத்த முடியும்.  பெரும்பாலும் பிரபலமான Browsers க்கு இந்த வசதி இலவசமாக கிடைக்கிறது.

இதன் நன்மைகள் என்ன?

  1. உங்கள் இணையம் உலாவல் சிறப்பானதாக அமையும்
  2. உங்கள் தனி உரிமை, கண்ணியம் பாதுகாக்கப்படும்.
  3. உலாவிகள் Crash ஆவது குறையும்.
  4. இவை youtube போன்ற தளங்களிலும் Video க்களில் உள்ள விளம்பரங்களை கூட நிறுத்துவது தொடர்சியான இடையூறு அற்ற அனுபவத்தை வழங்குகிறது.

இதன் தீமைகள்?

பயன்படுத்துவதால் எந்த தீமையும் உங்களுக்கு இல்லை. சிலர்  Add-on  அல்லது Extension பாவிப்பதால் உலாவிகள் வேகம் குறைவதாக எண்ணுகிறார்கள். உண்மையில் இதை பாவிக்காவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்பாடும்.
இதன் தீமை வலை பக்கத்தை நடத்துபவருக்கு தான். அவருடைய வருமானம் குறையும். அவர் வருமானம் குறைகிறது என்பதற்காக நமது கண்ணியத்தை விற்க முடியாது தானே.

எவ்வாறு இயங்குகிறது?

இணைய பக்கம் தரவிறங்கும் போது விளம்பரங்களுக்கு உரிய Scripts இயங்குவதை இது  தடை செய்கிறது. இதன் மூலம் விளம்பரம், image ஆகவோ அல்லது text ஆகவோ அல்லது  Flash ஆகவோ எப்படி இருந்தாலும் இவை தரவிரங்குவதே இல்லை.
இதை விட சில சிக்கலான Elements அல்லது widget களை கூட தடை செய்ய முடியும். உதாரணமாக Friend connect உள்ள வலைபூக்கள் கொஞ்சம் தாமதிக்கும். இதற்கு முதல் தடவை தோன்றும் போது அதில் Right click செய்து Block This Ads  என்பதை கொடுத்தல் போதும். அடுத்த தடவை வரும் போது பக்கம் மின்னல் வேகத்தில் வரும்.

இதை எப்படி பயன்படுத்துவது எப்படி?

விளம்பரங்களை தடை செய்யும் வேலையை செய்ய ஏராளமான addons இருக்கின்றன. இவை பெரும்பாலும் 300 KB அளவில் இருப்பதோடு ஒரே click மூலம் தரவிறக்கி நிறுவ கூடியதாகவும் இருக்கும். முன்னணி மூன்று உலாவிகளுக்கு இதை தரவிறக்கி பயன்படுத்தும்  முறை பற்றி பார்ப்போம்.

Google Chrome  பாவனையாளர்கள்

  • Extension முகப்பு பக்கம்: Home Page
  • அளவு: 300 kB

FireFox  பாவனையாளர்கள்

  • Extension முகப்பு பக்கம்: Home Page
  • அளவு: 200KB

நிறுவும் முறை: தரவிறக்கியவுடன் தானாகவே நிறுவப்படும். தேவை பட்டால் சில படிமுறைகள் தோன்றும். restart செய்வது சில் சமயம் அவசியமாகலாம்.
Internet Explorer 7, 8, 9  பாவனையாளர்கள்

இதற்கான உதவிகள் மிக குறைவு. நீங்கள் இப்போதும் IE browers பயன்படுத்துவது தொழில்நுட்பத்தில்  நீங்கள் இன்னும் கூர்ப்படையவில்லை என்பதை உணர்த்துகிறது .

என்றாலும் உங்களுக்காக ஒரு சிலவற்றில் ஓரளவு சிறந்தது

  • Extension  முகப்பு பக்கம்: Home Page
  • அளவு: 1MB
  • நேரடியாக தரவிக்க: One Click Download oad  (நீங்கள் Chrome உலாவியில் இப்போது உலாவிக்கொண்டு இருந்தால் மட்டும் கிளிக் செய்யுங்கள்)
இதை நிறுவுவது மென்பொருள் நிறுவும் முறையை ஒத்தது.  ஏனைய உதவிகள் Homepage இல் உள்ளது.


நீங்களும் இப்போதே இதை  நிறுவுங்கள். பாதுகாப்பான உலாவல் Adblocker  உடன் ஆரம்பம்.....

Watch Youtube streaming in Slow Internet Speed

மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed

அனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக YouTube homeஇரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது  coverage பிரச்சனை. Network   Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை  குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.



இதில் எந்த புதுமையும் இல்லை. வழக்கமாக நாம் கையடக்க தொலைபேசிகளில் பார்க்கும் முறையை கணணியில் பிரயோக்கிக்க போகிறோம். அவ்வளவுதான். இது மிக இலகுவான முறை.

இதன் நம்மைகள் என்ன?

  1. மிக மிக மெதுவான இணைப்பிலும் தொடர் அறா நிலையில் காண முடியும் . 10 KBps என்ற அளவு போதும்.
  2. data பாவனையும் குறைவு.

இதன் குறைகள் என்ன?

  • காணொளி தரம் குறைவானது 
  • 3D, HD இவற்றை எதிர் பார்க்க முடியாது.
  • Mono sound 
  • இதற்கு விசேடமாக ஒரு மென்பொருளை தரவிறக்க வேண்டி உள்ளது.
என்ன குறைகள் இருந்தாலும் streaming  இடையூறு இன்றி கிடைப்பதால் இதை விரும்பலாம்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  1. RealPlayer  என்ற மென்பொருளை இங்கே தரவிறக்கி நிறுவுங்கள் . ஏற்கனவே இருந்தால் தேவை இல்லை.
  2. அடுத்து  m.youtube.com இந்த இணைப்புக்கு விஜயம் செய்யுங்கள்.
  3. விரும்பிய காணொளியை தெரிவு செய்து Watch  Now என்பதை தெரிவு செய்யுங்கள்.
  4. தானாகவே RealPlayer இயங்கி தொடர்ந்து இடையூறு இல்லாமல் காட்சிகள் நகர ஆரம்பிக்கும்.
பொதுவாக mobile இல் காணொளி பார்ப்பது பற்றி அறிந்து இருப்பீர்கள். ஆனால்  இதுவே கணணியில் இயங்குவதில்லை. காரணம். rstp என்ற protocal மூலமே இது தொலைபேசியில் சாத்தியமாகிறது. பொதுவாக இந்த  protocal லை VLC media player நன்றாக கையாளும். ஆனாலும் இது youtube உடன் இயங்க சிரமப்படுகிறது. அதனால் தான் real player  தேவைப்படுகிறது.
இனி நீங்களும் கணணியில் youtube திரைப்படங்களை காணுங்கள். இது தொடர்பான சில இடைமுகங்கள் இதோ::

** Windows 8 வந்து விட்டது. நன்றாக இருக்கிறது. நீங்களும் மாற வேண்டிய தருணம் விரைவில் வரும்.. நிறுவுவது தொடர்பான விளக்கங்களை இங்கே விரைவில் காணலாம்.

மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் - Best Browsing in Tortoise Speed internet

மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் - Best Browsing in Tortoise Speed internet

அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைத்தாலும் பெரும்பாலான இடங்களில் அதன் தரம் குறைவானதே.. இதனால் அனைவரும் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை காணொளிகளை காண முடியாமை. இதை விட பெரும் பிரச்சனை இணைய பக்கங்கள் துண்டாட படுத்தல். அதாவது முழுவதுமாக தோன்றாமல் அறிகுறையாக வருதல். comment box போன்றவை தோன்றாமல் விடுதல், படங்கள் மறைதல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இணைய இணைப்பு வேகம் அதிகரிக்காத வரை இவற்றை நேரடியாக சீர் செய்ய முடியாது. ஆனால் இணைய பக்கங்களை servers மூலம் வேறு ஒரு இடத்தில் தரவிறக்கி optimize மீள நீங்கள்   காணும் ஒரு நுட்பம் பற்றி காண்போம்.

இதற்கு முன் மிக மெதுவான இணைப்பிலும் youtube காணொளிகளை காணும் நுட்பத்தை பகிர்ந்து இருந்தேன். இப்போதும் அதே நுட்பத்தில் அதாவது mobile இல் தரவிறக்குவது போன்ற முறையில் கணனியில் இணைய பக்கங்களை காணும் முறையை காண்போம்.

இங்கே காண்க: மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch YouTube streaming in Slow Internet Speed

மெதுவான இணைப்பிலும் இயங்கும் ஒரு உலாவி என்றால் அது opera தான். ஆனால் opera கையடக்க தொலைபேசிகளிலே இயங்குவதில் பிரபலம் மிக்கது. java வினை கொண்ட எந்த mobile இலும் இயங்குவது இதன் சிறப்பு.

இதே opera நிறுவனம் developing தேவைகளுக்காக அறிமுகப்படுத்திய Opera Mobile Emulator என்ற மென்பொருள்  மூலமே  மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல்  மேற்கொள்வது பற்றி பார்ப்போம்.

உண்மையில் Opera Mobile Emulator நோக்கம், வெவ்வேறு mobile இல் உள்ள  opera mini இல் இணைய பக்கம் எப்படி தோன்றும் என்பதை கணனியில் காண்பதே ஆகும்.

Opera Mobile Emulator நேரடியாக இணைய பக்கத்தை தரவிறக்காமல் தனது serverகளில் தரவிறக்கி பக்கத்தை ஒழுங்காக்கி மிக விரைவாக உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒரு விரைவான உலாவல் அனுபவத்தை 2G  (2.5G) வலையமைப்பிலும் பெற முடியும்.

 இதன் மூலம் இன்னும் பல நன்மைகள் உள்ளன.

  • விரைவான உலாவல்
  • Tracking இல் இருந்து பாதுகாப்பு
  • பல வித mobile களிலும் உலாவும் அனுபவம் 
  • mobile இல் மட்டுமே காண கூடிய பக்கங்களை கணனியில் காண முடிகின்றமை.
  • Adsense tricks
Product Site: opera.com/
சில வேலைகளில் பக்கங்கள் வேறு விதமாக தோன்றினால்  Setting > User Agent > Desktop ஆக மாற்றி விடுங்கள்.
மிக விரைவாக வேண்டும் என்றால் அல்லது இணைப்பு மிக மெதுவானது ஆயின் Setting> opera turbo > always on இல் மாற்றி விடுங்கள்.
கவனிக்க: Opera  Desktop Browser வேறு , Opera Mobile Emulator வேறு

Google Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி

Google Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை SMS மூலம் பெறும் வழி

Google இணையத்தை பயன்படுத்தும் அனைவரின் அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. Analytic, Adsense, CSE, Shop, Blogger, Site, Adword, Lab, Database, Cloud, Gmail  என எண்ணற்ற வசதிகளை தருகிறது. ஒரே Google Account இன் கீழே அனைத்தையும் பெற முடியும். இதனாலேயே இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் ஆரம்பித்தது. Google API அனைவருக்கும் அறிமுக படுத்தியதன் மூலம் வேறு தளங்களுக்குமான உதவிகள் பெருக ஆரம்பித்தன.அண்மையில் Google தனது பயனாளர்களை உறுதி படுத்த அவர்களது பௌதீக அடையாளங்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தது. கை ரேகை, கருவிழி இப்படி ஏதோ ஒன்று. நிச்சயம் எதிர் காலத்தில் இவ்வாறான முறை பழக்கத்தில் வரும்.



இப்போது Google பயனாளர் கணக்குகளை ஊடுருவுபவர்கள் அதிகம். Google தளங்களை ஊடுருவுவது கடினம். ஆனால் இலகுவாக உங்கள் கணணியை தாக்கி உங்கள் கடவுச்சொல்லை பெற முடியும். இப்படி பெறுவதை கூட கட்டுபடுத்த தான் Google 2nd step Verification முறை அறிமுகமானது. இது பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

ஏதோ ஒரு வழியில் உங்கள் Google கணக்கு தாக்கப்படும் போது முன்பு மின்னஞ்சல் எச்சரிக்கை  வரும். சில நாடுகளில் SMS எச்சரிக்கையை பயன்படுத்தி இருந்தார்கள். இப்போது அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க கூடியதாக உள்ளது.


  1. https://www.google.com/settings/security இல் செல்லுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகளை பயன்படுத்தினால் பொருத்தமான கணக்கை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  2. Notifications பகுதிக்கு செல்லுங்கள். இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே இருக்கும்.
  3. இப்போது அதன் கீழ் உள்ள Phone பகுதியில் உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கொடுங்கள். சிலசமயங்களில் ஏற்கனவே இருக்கும். இருந்தால் Verify செய்து கொள்ளுங்கள்.  அதாவது அவர்கள் அனுப்பும் SMS இல் உள்ள 6 இலக்கத்தை பதிவதன் மூலம்.
  4. verify செய்த பின்னர் Suspicious login attempt பகுதியில் Tick இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி யாரவது Proxy மூலமோ , உங்கள் பழைய password மூலமோ அல்லது வேறு வழிகளில் உள்ள நுழைய முயலும் போது SMS உடனடியாக வரும். உங்கள் கணக்கு பாதுகாக்கப்படும்.

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்






பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த .

பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?



பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.

Karaoke Software என்றால் என்ன?


சாதாரண மக்கள் - பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.

Karaoke Software இன் திறன் என்ன?


Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்... இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.

Karaoke Software இன் அடிப்படை  என்ன?


இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.

சில Karaoke Softwares

Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.
இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.
இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.
மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.
இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.

இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trail இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,
Download: Cloud (10 MB) or Direct
இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும். 
விரும்பினால் கீழே crack இனை பெற்று பயன்படுத்துங்கள். 
music_morpher_gold_crack_ONLY: Cloud (61 KB)

JavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு

JavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு

வழமையாக சராசரி பதிபவர்கள் தமது உள்ளடக்கங்களை பாதுகாக்க right click  தடை செய்வார்கள். அல்லது selecting option தடை செய்வார்கள். ஆனால் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்கா நிலையில் இவை இரண்டுமே பயனற்றது.  ஒரு சில பதிபவர்கள் தமது ஆக்கங்களை புகைப்படங்களாக water mark உடன் வெளியிடுகிறார்கள். அவை மீண்டும் தட்டச்சு செய்யப்படும் சோம்பலினால் பதிவு திருடர்களிடம் இருந்து  ஓரளவு பாதுகாக்கப்டுகின்றன. 
பதிபவர்களின் நீண்ட ஏக்கம் தமது பதிவுகளை பிற பதிபவர்கள் பிரதி எடுப்பது அல்ல. தமது பெயரை குறிப்பிடாமல் பிரதி பிரதி எடுத்து பிரபல பத்திரிகைகள் பிரசுரித்து விடுகின்றனவாம். குறிப்பாக சினிமா விமர்சனங்கள்.
உண்மை தான். என்னுடைய தொழிநுட்ப பதிவுகளை கூட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பத்திரிகை (இருப்பதே 3 தான்) வாரா வாரம் என்னை பற்றியோ அல்லது தளம் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல் வெளியிட்டார்கள். எனது நண்பர் சொல்லியே அந்த பத்திரிகையை வாங்கி படித்த போது பல மாதங்களாக இது தொடர்வது தெரிந்தது. காரணம் கேட்டதுக்கு திரட்டிகளில் இணைப்பது பதிபவர்களுக்கு சொந்தம் இல்லையாம். விடுவான நான்? தொடர் மின்னஞ்சல்) தாக்குதலின் பின் முன் பக்கத்தில் ஒரு நாள் மன்னிப்பு செய்தி பிரசுரித்தார்கள். இப்போது என் பெயருடனே முக்கிய பதிவுகளை வெளி இடுகிறார்கள்.


 இது எனக்கு பெரிய இழப்பு இல்லை. ஆனால் கவிதை கட்டுரை என திட்டமிட்டு தமது திறமைகளை வெளிப்படுத்துபவர்களது ஆக்கங்களை திருடுவது அநாகரிகம். இன்று இலங்கையில் வரும் பல பத்திரிகைகள் வேறு நாட்டை சேர்ந்தவர்களது ஆக்கங்களை (கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள்) முகவரி இல்லாமல் பிரகிரிக்கின்றன. பாவம், இந்த விடயம் பதிபவர்களுக்கு தெரிவதில்லை. இதை தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாது. இலங்கை சட்டங்கள் இலங்கை ஆக்கங்களை மட்டுமே பாதுக்காகின்றன.


சரி தலைப்பிற்கு வருவோம். இதற்கும் மேலே சொன்னதிற்கும் சம்பந்தமே இல்லை.  ஒவ்வொரு பத்திரிகையும் தமக்கென ஒரு இணைய பக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். இதை வடிவமைத்து பராமரிக்க தொழிநுட்ப வியலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எவ்வாறு நாம் பிரதி எடுப்பதை தடுத்தாலும் இலகுவாக அந்த வழிகளை உடைத்து விடுகின்றனர். இவர்களை எல்லாம் SOPA, PIPA கொண்டு தான் அடக்க முடியும்.
========================================================================
 ஜாவாஸ்க்ரிப்ட் நிறுத்தி பிரதி எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.(இது தொடர்பாக முன்பு விரிவாக பார்த்து விட்டோம்.) இப்போது  அதை எவ்வாறு தடை செய்வது என்பது பற்றி பார்போம்.
 இதை இரண்டு விதமாக செய்யலாம்.

  1. எச்சரிக்கை செய்தியை காட்சி படுத்தல்.(பயனற்றது)
  2. பக்கத்தை தரவிறங்க விடாமல் தடுத்தல்.
இதன் அடிப்படை தத்துவம் உங்கள் பக்கம் தரவிறங்கும் கணனியில் JavaScript இயக்கம் நிறுத்தப்பட்டால் உங்கள் பக்கம் வேறு இடத்திற்கு திருப்பி விடுதல் ஆகும்.


1.பக்கம் தரவிறங்க விடாது தடுத்தல்:


இதற்கு உங்கள் டெம்ப்ளேட்டை எடிட் செய்ய வேண்டும். (வழமையான முறையில் blogger.com > template > edit HTML >செல்லுங்கள்)

  1. இப்பொது <head> என்ற வரியை கண்டு பிடியுங்கள்.
  2. அதன் கீழே இதை உடனடியாக பிரதி இடுங்கள் 
  3. அடுத்து save செய்து வெளியேறுங்கள்.
இப்போது உங்கள் பக்கத்தை ஜாவாஸ்க்ரிப்ட் முடக்கப்பட்ட நிலையில் பார்வையிட வரும் ஒருவர் தானாக கூகுளில் எப்படி ஜாவாஸ்க்ரிப்ட் இயங்க வைப்பது என்ற தேடல் முடிவுக்கு திருப்பப்படுவார். நீங்கள் விரும்பினால் இத வரியை உங்கள் விருப்பம் போல மாற்றுங்கள். "https://www.google.com/search?q=How+to+Enable+ JavaScript"

இதன் மூலம் உங்கள் விருப்பமான பக்கம் காட்சிப்படுத்த முடியும். உதாரணமாக படங்கள், அல்லது வேறு விரும்ப தகாத தளங்கள், அல்லது java-script enble தொடர்பான youtube வீடியோ லிங்க்.

இது எவ்வாறு இயங்கும் என்பதை காண உங்கள் உலாவியில் setting பகுதியில் JavaScript  இயக்கத்தை தடை செய்து விட்டு இங்கே Demo பக்கத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

இவ்வாறு செய்த பின்னர் பிரதி எடுக்க முதலே பக்கம் திருப்பப் பட்டுவிடும். பிரதி எடுக்க விரும்பினால் page source இனை எடிட் செய்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் பிரதி எடுக்கலாம். 

உண்மையில் இந்த வசதி அறிமுகமானது பல validations (Email, password) முறைகள் இயங்க ஜாவா தேவை என்பதால் ஆகும். ஆனால் நாம் இதை வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம்.

மற்றும் ஒரு பதிவில் மீண்டும் சந்திக்கிறேன். உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.!

Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்

Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்

Code.orgசில தினங்களுக்கு முன்னர் Google தனது Opensource திட்டத்தின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான முதலாவது இணைய கணணி கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகத்தை இலவசமாக அனைவருக்கும் திறந்து விட்டது.இணையத்தில் ஏனைய அனைத்து கற்கைளையும் இலவசமாக தரும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உண்டு. இவற்றில் பல வசதிகள் கிடைப்பதுடன், Online Exam மூலம் இலவசமாகவே Certificates களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இவை தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.
Google, Computer language தொடர்பாக கற்க இணைய பல்கலைக்கழகத்தை இப்பொது திறந்தாலும், இணையத்தில் ஏற்கனவே இவை அறிமுகமாகி விட்டன.

அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களே இவ்வசதியை வழங்குகின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட இக்கற்கைகள் video, eBook க்கும் மேலாக Virtual Lab வசதியையும் தருகின்றன. கணணி, Chemistry, Maths, Physics, Business, Engineering என ஏராளமான கற்கைகள்.. இவை தொடர்பாக பகிரப்பட்ட Twitter இணைப்புக்கள் இதோ; விரும்பியதில் தொடருங்கள் .....

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software

நாளுக்கு நாள் Windows 8 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிச்சயம் Windows 8 / 7 உடன் இணைந்து வரும் Security Essential உதவுவது இல்லை. இதற்கும் மேலாக பலர் வருட ஒப்பந்த அடிப்படையில் Antivirus இனை தரவிறக்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை Windows 8 இன் விலையின் 25% க்கும் அதிகமாகும். இதனால் பலரும் பல விதமான இலவச Antivirus இனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவை Windows 8 உடன் இசைவது இல்லை.    Windows 7 /8 உள்ள கணனிக்கு பொருத்தமான ஒரு இலவச Antivirus தொடர்பான விமர்சனமாக இப்பதிவு...
இப்போது Opensource OS க்கே Antivirus வருகிறது. இப்போது வரும் Antivirus தனியே Virus Scanning செய்வதில்லை. Windows 7 க்காக உருவாக்கப்பட்ட Antivirus களை பெயரில் மட்டும் support to Windows 8  என்று மாற்றி கொடுக்கிறார்கள். இதை 8 இல் நிறுவும் போது பெரும்பாலும் Black Screen பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

பலராலும் அறியப்பட்ட Antivirus:

  1. Kaspersky
  2. AVG
  3. Avast
  4. Norton
8 இன் சிறப்பே வேகம் தான். ஆனால் இவ் Antivirus வேகத்தை குறைப்பதில் முன்னணி பங்காக உள்ளது.
பலராலும் அறியப்படாத வேகமாக இயங்க கூடிய இலவச Antivirus, Windows 8 க்கு ஆதரவு தரும் ஒரு Antivirus தொடர்பாக பார்ப்போம்.


Comodo Internet Security


இதை பலர் 4 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் சிறப்பே விரைவு தான். Windows 7 வந்த போது AVG போன்றவை வேகத்தை மிகவும் தாமத படுத்தின. அப்போது பலர் இதன் பக்கம் வந்தார்கள்.
Free Internet Security

Windows 8 வந்தவுடன் இதன் Windows 7 பதிப்பு இயங்கவில்லை. பின்னர் வருட இறுதியில் 8க்கும் ஆதரவு தரக்கூடிய வகையில் இதன் v6 வெளியாகியது. இதன் Premium பதிப்பு இலவசமாக கிடைக்கிறது.

Comodo Anti virus பதிப்பும் இருக்கிறது. அதை விட Comodo Internet Security மிக பொருத்தமானது. இதில் இருக்கும் Firewall பல சந்தர்ப்பங்களில் உங்கள் Bandwidth இனை பெருமளவில் பாவிக்கும் மென்பொருட்களை அடையாளம் கண்டு தடை செய்கிறது. Sandbox technology இதில் மட்டுமே உள்ள சிறப்பு.

The Secrets of Comodo Internet Security
  • Antivirus: Tracks down and destroy any existing malware hiding in a PC.
  • Anti-Spyware: Detects spyware threats and destroys each infection.
  • Anti-Rootkit: Scans, detects & removes rootkits on your computer.
  • Bot Protection: Prevents malicious software turning your PC into a zombie.
  • Defense+: Protects critical system files and blocks malware before it installs.
  • Auto Sandbox Technology™: Runs unknown files in an isolated environment where they can cause no damage.
  • Memory Firewall: Cutting-edge protection against sophisticated buffer overflow attacks.
  • Anti-Malware Kills malicious processes before they can do harm.

System Requirements:
Windows 7 / Vista / XP SP2/ Windows 8, 152 MB RAM / 400 MB space


இப்போது Windows 7 /8 இல்  வேறு Anivirus இனை எவ்வித இடைஞ்சலும் இன்றி பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

இனி Windows 8 வாங்க இருப்பவர்களும், மெதுவான OS இயக்கத்தை கொண்டவர்களும் இதற்கு மாறலாம். நிச்சயம் மாற்றத்தை உணருங்கள்.

கவனிக்க: Antivirus மீள நிறுவுவது சாதாரண மென்பொருட்களை போன்றது என்றாலும் சில சமயங்களில் அரிதாக இயங்கு தளத்தை முடக்க கூடிய அபாயம் உள்ளது.  XP இல் AVG, Avast போன்றவை நீக்கப்படும் போது இவ்வாறன பிழைகள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க...

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க...

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMP
UTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்..

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற இதோ ஒரு எளிய முறை !!!

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற இதோ ஒரு எளிய முறை !!!


 இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

 அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

 இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

 நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

 இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

வன்தட்டு நிலை நினைவகம்(HARD DISK) -ஐ பாதுக்காப்பது எப்படி?



வன்தட்டு நிலை நினைவகம்(HARD DISK) -ஐ பாதுக்காப்பது எப்படி?

 உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

 மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

 இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

 இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

 எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

 1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

 2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

 3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

 4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

 உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

 5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

 6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

 உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?


 இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL: இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா… அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை.

 இன் று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டு பிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

 இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார். ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.

 நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை.

 நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளா ர். நேவார்க் நகர உயர் நிலைப பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

 இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் நமது தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா ?

முதன் முதலில் நமது தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா ???

 பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்????


 கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!!

 பதுருதின் தியாப்ஜி லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்கு அறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர் நீதிமன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் . 1876 (AI) இயக்கம் மூலமாக அணைத்து மக்களின் முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் அனைத்து மக்களும் சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்

 இவருடைய ஆளுமை திறனால் தான் இஸ்லாமியர்கள் அதிகமா இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூற்றினர்
 மகாத்மா காந்திஜி .அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர். இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே சமுதாயத்திற்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்

 ஆனால் தேசிய கொடியே ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள் . ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான் கட்டினர் என்று மறந்து விட்டனர் .அதனால் அவர்களுக்கு நாம் நியாபகம் காட்டவேண்டும் அது நமது கடமை அல்லவா ?????????


 Source : ஆதாரம்

 இந்தியாவின் அதிகார பூர்வ இணைய தளம்

http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html

நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

 நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

 ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

 நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

 இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

 அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

 உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

 முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

 இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.